வெள்ளி, 7 ஆகஸ்ட், 2015

RTI - இவ்வளவு தான்



http://www.tn.gov.in/rti/proactive/guidebook_rtiact.pdf

தகவல் அறியும் சட்டத்தில் விண்ணப்பம்
1. எழுத்து மூலமாக இருக்க வேண்டும்.
2. விண்ணப்பத்தினை பதிவஞ்சல் மூலமாக 
அனுப்புங்கள். நகல், தபால் மூலம் அனுப்பிய 
இரசீது ஒப்புகை அட்டை பாதுகாப்பாக 
வைத்திருங்கள்.
அல்லது நேரில் கொடுத்தால் ஒப்புகை 
வாங்குங்கள்.
3. மாநில அரசு துறைகளுக்கு 
விண்ணப்பத்துடன் 

ரூ10/ - நீதிமன்ற ஒட்டுவில்லை ( COURT FEE 
STAMP -நீதிமன்ற வளாகங்கள் தாசில்தார் 
அலுவலகங்களுக்கு பக்கத்தில் 
பெட்டிக்கடைகளில். முத்திரைத் தாள் 
விற்பனையாளர்களிடம் கிடைக்கின்றது). 
மத்திய அரசுக்கு ரூ10/- க்கு கேட்பு 
வரைவோலையாக செலுத்தப்படவேண்டும். 
ஸ்டேட் பேங்க் கடன் அட்டைகள் மூலமாக 
இணையத்திலும் செலுத்தலாம்.
விண்ணப்பம் பெற்ற நாளிலிருந்து 30 
நாட்களுக்குள் பொதுத் தகவல் அலுவலர் பதில் 
அளிக்கவிட்டால் அல்லது விண்ணப்பம் வேறு 
ஏதாவது காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டால் 
தமிழ்நாட்டினை பொருத்த வரை முதுநிலை 
பொதுத் தகவல் அலுவலரிடம் முதல் 
மேல்முறையீடும் தமிழ்நாடு தகவல் 
ஆணையத்திடம் இரண்டாவது மேல் 
முறையீடும் செய்யப்படவேண்டும். தனி மனித 
சுதந்திரம் மற்றும் உயிருக்கு ஆபத்து உள்ள 
சூழ்நிலைகளில் 48 மணி நேரத்தில் தகவல் தர 
வேண்டும். காவல் துறை ஒரு நப்ரினை கைது 
செய்தால் அந்த நபர் மேல் உள்ள வழக்கு பற்றி 
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 48 மணி 
நேரத்திற்குள் தகவல் தர வேண்டும்.
காவல் துறையைப் பொருத்த வரை மாவட்ட 
காவல்துறைக் கண்காணிப்பாளர் அல்லது 
காவல்துறை ஆணையாளர்கள் பொதுத் தகவல் 
அலுவலர்களாக உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் துறையைப் 
பொருத்த வரை மாவட்டஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது), பொதுத் தகவல் 
அலுவலராகவும் மாவட்ட வருவாய் அலுவலர் 
முதல் மேல் முறையீட்டு நீதிமன்றமாகவும் 
தமிழ்நாடு தகவல் ஆணையம் இரண்டாவது 
மேல்முறையீட்டு நீதிமன்றமாகவும் இருக்கும்.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் நீங்கள்
1. ஆவணங்களை பார்வையிடலாம். முதல் ஒரு 
மணி நேரத்திற்கு கட்டணம் கிடையாது
2. ஆவணங்களை நகல் எடுக்கலாம். பக்கதிற்கு 
இரண்டு ரூபாய் அல்லது உண்மையாக ஆகின்ற 
செலவு
3. சான்றிட்ட நகல்கள் வழங்கப்படவேண்டும்.
4. மின்ணனு சேமிப்பு வடிவில் உள்ள 
ஆவணங்களை நீங்கள் அதே வடிவில் நகல் 
பெறலாம். அதாவது சி.டிப் பதிவுகள் 
போன்றவற்றின் நகல்களைப் பெறலாம்.
பொது மக்களுக்கு தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் எந்த துறையில் தகவல் கேட்க வேண்டும் 
என்ற குழப்பம் இருக்கின்றது. தமிழ்நாடு மாநில 
அரசு பலதுறைகளின் பொதுத் தகவல் 
அலுவலர்கள் மேல்முறியீட்டு அலுவலர்கள் 
பட்டியலை இணையத்தில் வெளியிட்டுள்ளது. 
மத்திய அரசு அனேகமாக குடிநீர்,சாக்கடை 
தெருவிளக்கு போன்றவை உள்ளாட்சி 
அமைப்புகளின் கீழ் வருகின்றது.
தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அரசு 
துறைகள் தங்களது அலுவலர்களின் 
அதிகாரங்கள், கடமைகள் துறைகளுக்கு 
ஒதுக்கப்படும் நிதிகள் அதாவது துறை பற்றிய 
அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் 
அறியும் படி தெரிவிக்க வேண்டும் . மக்களிடம் 
இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் 
கோப்புகள் 
அட்டவனைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட 
வேண்டும்.
இந்தக் கடமையை செய்தாலே பாதி 
விண்ணப்பங்கள் குறைந்து விடும்.
தமிழ்நாடு அரசு இணையத்தில் தமிழில் வெளியிட்டுள்ள கையேடு:
மத்திய அரசு இணைய தளத்தில் நீங்கள் தகவல் 
உரிமைச் சட்டப்படி விண்ணப்பிக்கலாம்
மத்திய அரசின் தகவல் உரிமைச் சட்டக் 
கையேடு ஆங்கில பி.டி.எப் கோப்பு வடிவில்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஆங்கிலத்தில் 
பி.டி.எப் வடிவில்

திங்கள், 19 ஜனவரி, 2015

RTI Rules&Regulation

RTI க்கான பட முடிவு



RTI & Legal Awareness

தகவல் பெறும் உாிமைச்சட்டத்தின் 5 முறையீடுகள்

I. தகவல் கோரும் விண்ணப்பம் - காலவரையறை 30 நாட்கள்

தகவல் கோரும் விண்ணப்பம் பிாிவு 6 (1) APPLICATION

அனுப்புநா் - உங்கள் முகவாி

பெறுநா் - தகவல் பெற விரும்பும் பொது அதிகார அமைப்பின் முகவாி

(பொது தகவல் அலுவலா்,அலுவலக முகவாி, மாவட்டம்.)

உதாரணம்
பொது தகவல் அலுவலா்,
வட்டாட்சியா் அலுவலகம், துாத்துக்குடி.

II. முதல் மேல்முறையீடு (பிாிவு 19 (1)) FIRST APPEAL - 45 நாட்கள்

எதற்காக முதல் மேல்முறையீடு

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா் அதே

அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டை பிாிவு 19 (1)-ன் கீழ்

தாக்கல் செய்ய வேண்டியது.

III. இரண்டாம் மேல்முறையீடு (பிாிவு 19 (3)) SECOND APPEAL

எதற்காக இரண்டாம் மேல்முறையீடு - 90 நாட்கள்

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா் அதே

அலுவலகத்திற்கு முதல் மேல்முறையீட்டை பிாிவு 19 (1)-ன் கீழ்

தாக்கல் செய்து, முதல் மேல்முறையீட்டு அலுவலா் 45

நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்காத போது பிாிவு 19 (3)-ன் கீழ்

இரண்டாம் முறையீட்டை தாக்கல் செய்ய வேண்டியது.

IV. ஆணையத்திற்கு நேரடி புகாா் (பிாிவு 18 (1) ) COMPLAINT

எதற்காக பிாிவு 18 (1)-ன் கீழ் புகாா் ?

பிாிவு 6 (1)-ன் கீழ் ஒருவா் தகவல் கோாிய பிறகு தகவல் 30

நாட்களுக்குள் அளிக்கப்படாத போது விண்ணப்பதாரா்

ஆணையத்திற்கு நேரடியாக பிாிவு 18 (1)-ன் கீழ் புகாா் மனுவை

தாக்கல் செய்ய வேண்டியது.

V. உத்திரவின் மீதான புகாா் (பிாிவு 18 (1)) - 1 வருடம்

COMPLAINT AGAINST ORDER

எதற்காக பிாிவு 18 (1)-ன் கீழ் மீண்டும் மேல்முறையீட்டு புகாா் ?

உத்திரவினை நிறைவேற்றாத அல்லது தகவலை திசைதிருப்பிய

தகவலுக்காக பொதுத்தகவல் அலுவலா் மற்றும் பொது அதிகார

அமைப்பின் மீது ஆணையத்திற்கு நேரடி புகாா் பிாிவு 18 (1) -ன்கீழ்

ஆணையத்தின் உத்திரவிட்டதிலிருந்து மேல்முறையீட்டாளா் /

புகாா்தாரா் 1 வருடத்திற்குள் புகாா் மனுவை தாக்கல் செய்ய

வேண்டும்

RTI actions- காங்கிரஸ் தலைவர் சோனியா

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்காதது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ், பாஜக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகிய 6 தேசியக் கட்சிகளும் பொது அமைப்புகள் என்றும் அவை தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் பதிலளிக்க கடமைப்பட்டவை என்றும் மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) அறிவித்திருந்தது.
இந்நிலையில், தகவல் உரிமை ஆர்வலரான ஆர்.கே.ஜெயின், சில விவரங்களைக் கோரி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மனு அனுப்பினார். அதற்கு காங்கிரஸ் பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், தனது மனுவுக்கு பதிலளிக்காத காங்கிரஸ் கட்சி மீது மத்திய தகவல் ஆணையத்தில் ஆர்.கே.ஜெயின் புகார் அளித்தார். பின்னர், அந்தப் புகாரின்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு அவர் கோரியிருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம், அவரது புகாரின்பேரில் ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு தகவல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட தகவல்களைத் தரவேண்டும் என்ற உத்தரவைப் பின்பற்றாதது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்குமாறும், தகவல் கோரி கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்காதது ஏன் என்று விளக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

செவ்வாய், 13 ஜனவரி, 2015

Sample RTI - உயில்

உயில்


Sample RTI - Minute book -Town Panchayat

Sample RTI - Road ( Town Panchayat )

Sample RTI - ILLEGAL Buildings ( Town Panchayat )

Sample RTI - Grievance cell

Sample RTI - Water Tanks

Sample RTI - Counsilor activities

Sample RTI - WATER

Sample RTI - நகராட்சி



SAMPLE RTI - Crackers



Sample RTI - ஊராட்சி ஒன்றியம்

தகவல் கோரும் மனு
படிவம் அ
விதி 3 தகவல் உரிமை சட்டம் (கட்டணம்) விதிகள் 
பெறுநர்
பொது தகவல் அலுவலர் மற்றும் 
ஊராட்சி ஒன்றிய விவாக்க அலுவலர் (நிர்வாகம்)
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம்
1. விண்ணப்பதாரர் பெயர்:
நல்வினை.விஸ்வராஜு எம்.ஏ., பி.எல்.,
வழக்கறிஞர்,
2. விண்ணப்பதாரர் முகவரி:
எண் 7 பழைய பேருந்து நிலையம்,
இராசிபுரம் 637 408,
நாமக்கல் மாவட்டம்
செல் 9443875801
3. தகவல் பற்றிய விபரம்:
(அ) சம்பந்தப்பட்ட துறை: துறை
(ஆ) தேவைப்படும் தகவல் பற்றிய விபரம்:

தங்கள் ஊராட்சி ஓன்றியத்தில் 01.11.2011 முதல் இன்று வரையில் நடைபெற்ற மற்றும் நடைபெற்று வரும் வேலைகள் ஷை வேலை திட்டத்தின் பெயர் திட்ட மதிப்பீடு, வேலை காலம் ஓப்பந்ததாரர் பெயர் முகவரி ஆகிய தகவல்கள் ஊராட்சிகள் வாரியாகவும், ஒன்றிய கவுண்சிலர் வார்டுகள் வாரியாகவும் தேவை.

ஷை நிதி அளித்த அரசு துறை அல்லது திட்டத்தின் பெயர் நா¡டாளு மன்ற உறுப்பிணர் சட்டமன்ற உறுப்பிணர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பிணர் ஓன்றியகுழு உறுப்பினர் பெயர் ஆகிய தகவல்கள் தேவை

4. நான் கோரும் தகவல்கள் இச்சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்தவரையில் அது தங்கள் அலுவலகம் சம்பந்தபட்டது என தெரிவிக்கின்றேன்.

5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ 10/- க்கு நீதிமன்ற கட்டண வில்லைகள் மூலமாக செலுத்தியுள்ளேன்


(நல்வினை.விஸ்வராஜூ)
09.1.2015
இராசிபுரம்




திங்கள், 12 ஜனவரி, 2015

How to get chit fund fraud amount

Frnds,எங்கள் ஊரில் ஒருவர் தீபாவளி சீட்டு நடத்தினார்,அவர் இதுவரை பணம் தரவில்லை. கேட்டால் தரன் தரனு தான் சொல்லிட்டு இருக்கார். நாங்களும் கால அவகாசம் தேவையான அளவு கொடுத்துவிட்டோம்.அவரிடம் இருந்து எப்படி பணத்தை திருப்பி பெறுவது என்பது தெரியவில்லை. அதனால் எந்த அதிகாரியை அணுகினால் அவரிடம் இருந்து பணத்தை திருப்பி பெற முடியும். So pls suggest some idea.

Go to your district SP in a group of persons and prefer a complaint under sec 5 of TANPID act. He would forward it to economic offenses wing. They can attach the properties of the accused and distribute to victims.

Sample RTI - Electricity

எனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் மின்கம்பம் : இடமாற்றம் செய்யக் கோரிக்கை
20 வருடங்களுக்கு முன்னால் எனக்கு சொந்தமான எனது பட்டா விவசாய நிலத்தில் நான் ஊரில் இல்லாத பொழுது எனது அனுமதி இன்றி மின்கம்பம் ஊன்டபட்டது ,நான் இப்பொழுது அந்த இடத்தை மனை கட்டுவதர்க்காக உபயோகம் செய்து கொள்ள விரும்புகிறேன் ,தற்பொழுது அந்த மின்கம்பம் கீழ்படி படத்தில் கட்டியபடி சேதம் அடைந்த நிலையிலும் விழும் தருவாய் நிலையிலும் உள்ளது ,அதற்காக அந்த மின்கம்பத்தை என்னுடைய இடத்தில் இருந்து என்னுடைய எல்லகைக்கு வெளியே இருக்கும் பொது இடத்தில் மாற்றகோரி மின்சார வாரியத்தை அணுகினேன் அவர்கள் ஒரு மின்கம்பத்தை மாற்ற வேண்டுமெனில் ஒரு மின்கம்பதிர்க்கு இரண்டு லக்சம் வீதம் செலவு ஆகும் அது தவிர இதர செலவுகள் உள்ளன என கூறினார் ,அவ்வளவு பணம் கொடுத்து என்னால் மாற்றம் செய்ய முடியாது, நான் முதல்கட்டமாக என்ன செய்ய வேண்டும்?
இதற்கு RTI HELP DESK  அளித்த ஆலோசனைகள் 

 
தகவல் உரிமைச் சட்டம் 2005இன் பிரிவு 6(1) இன் கீழ் விண்ணப்பம்
(பதிவு அஞ்சல் ஒப்புகை அட்டையுடன் ) நாள் ...................


அனுப்புனர்



பெறுனர்



1, தனியார் நிலத்தில் உரிமையாளரின் முன் அனுமதி இல்லாமல் அவருக்கு உரிய நட்ட ஈடு கொடுக்காமல் மின்சார கடத்தி கம்பங்களை நடலாம் என்று தங்களுக்கு வழிகாட்டும் அரசு ஆணையின் ஒளி நகல் தரவும் .


2. மேற்படி கம்பங்களை நீக்கவேண்டும் என்று மனுதாரர் புகார் செய்யும் பட்சத்தில் அக்கம்பங்களை அவ்விடத்திலிருந்து அகற்றவோ அல்லது அங்கேயே தொடர்ந்து எதிர்ப்பையும் மீறி இருக்க வைக்கவோ உங்களுக்கு அதிகாரம் கொடுக்கும் அரசு ஆணையின் ஒளி நகல் தருக

. 3. மேற்படி இடத்தில் மின் கம்பங்களை நடலாம் என்ற தீர்மானத்தை முன்வைத்த அதிகாரியின் பெயர் , பதவி, அலுவலக முகவரி , தீர்மான தேதி , அதைப்பற்றிய அலுவலக கோப்பின் ஒளி நகல் தருக .
4. மேற்படி இடத்தில் மின்கம்பங்களை நட இறுதி உத்தரவு கொடுத்த அலுவலரின் பெயர் , பதவி , அலுவலக முகவரி தருக .


5,மேற்படி மின்கம்பம் எத்தனை ஆண்டிற்கு ஒரு முறை மாற்றவேண்டும் , மின்கம்பம் பழுதாகி உள்ளது என்று மனுதாரர் எழுத்து பூர்வமாக புகார் அளித்தால் எத்தனை நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்க்காண அரசனை நகல் இருந்தால் அதன் ஒளி நகல் தருக.


6. மேற்படி இடத்தில் மின்கம்பங்களை நடுவதற்கு முன் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விளக்கும் அரசு வழிகாட்டுதலின் ஒளிநகல் தருக.


7. மேற்படி இடத்தில் மின் கம்பங்களை நடும்போது நிலத்தின் உடமைதார் மறுப்பு தெரிவித்தால் வாரியம் எடுக்க கூடிய சட்டபூர்வமான நடவடிக்கைகளை எதிர் கொள்ள மின்வாரிய வழிகாட்டடுதலின் ஒளி நகல் தருக.


எனக்கு இணையதள வசதியும் திறமையும் இல்லை ஆகவே கோரிய தகவல்களை அஞ்சலில் 30 தினங்களுக்குள் அனுப்பிடக் கேட்டுக் கொள்கின்றேன். 


கட்டணமாக ரூபாய் 10 க்கான நீதிமன்ற கட்டண வில்லை ஒட்டியுள்ளேன் என்பதையும் கனிவுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இது தொடர்பாக மேல்முறையீட்டு அலுவலர் பெயர் பதவி முகவரி அளிக்கக் கோருகின்றேன்


இப்படிக்கு


பெயர்
ஒப்பம் தேதி


வெள்ளி, 9 ஜனவரி, 2015

SAMPLE RTI FORM

SAMPLE RTI APPLICATION FORM
To,
The Public information Officer
________________________
____________________________
____________________________
PIN: _______________________
Sir,
Subject: Request for Information under Right to Information Act 2005.
I Sri / Smt /Ms.
__________________________________________________________
Son/Daughter/wife of Shri/Smt/Ms.
__________________________________________
resident of
______________________________________________________________,
telephone number (with STD Code) ____- _____________________ and/or mobile
number: ______________________________ wish to seek information as under
----------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------------
I hereby inform that following formalities have been completed by me:
1. That I have deposited the requisite fee of Rs. _____/- by way of Cash / banker
cheque / Draft / Postal Order/ others ___________________ ) favoring
__________________________________ dated ________________.
2. I need the photocopy of the documents and I had deposited the cost of the
photocopy of Rs. ____/- for _____ (Number of Pages)
or
3. I had deposited sum of Rs. _____/- for the charges of CD. (strike out which ever
is not applicable)
4. That I belong to Category of below Poverty Line (BPL): Yes / No
(Strike whichever is not applicable). If yes, I am attaching the valid photocopy of
the certificate. Yes / No
5. That I am ‘Citizen’ of India and I am asking the information as ‘Citizen’.
6. I assure that I shall not allow/ cause to use/ pass/share/display/ or circulate the
information received in any case and under any circumstances, with any person or
in any manner which would be detrimental to the Unity and Sovereignty or
against the Interest of India.
Signature of the Applicant
Dated

புதன், 7 ஜனவரி, 2015

Sample RTI - Police

அனுப்புநர் :
     ம. பாலமுருகன்,
     த/பெ. மருதமுத்து,
     முல்லை நகர்,
     கந்தர்வகோட்டை,
     புதுக்கோட்டை.
      செல்: 9943588477

பெறுநர் :
      பொது தகவல் அலுவலர் அவர்கள்,
      கூடுதல் காவல் கண்காணிப்பாளர்,
      மாவட்ட குற்ற ஆவணக்கூடம்,
      புதுக்கோட்டை மாவட்டம்.
ஐயா,
      பொருள்: தகவல் அறியும் உரிமைச்சட்டம் – 2005 ன்படி எனது சகோதரர் இறந்த வழக்கு தொடர்பாக தகவல் கோரி விண்ணப்பம்.
      எனது சகோதரர் தாமரைசெல்வம் 11.04.2011 அன்று தனது நண்பர் சக்திவேலுடன் நார்த்தாமலை திருவிழாவிற்கு சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக கீரனூர் காவல் நிலையத்தில் 128/2011 வழக்கு பதியப்பட்டது. இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு முறை  மறுவிசாரணைக்கான உத்தரவு பெறப்பட்டது (நகல் இணைக்கப்பட்டுள்ளது). உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு Crl.O.P M.P No.4561/2012 ன்படி கணேஷ் நகர் காவல் ஆய்வாளராக இருந்த தமிழ்மாறன் விசாரணை செய்தார். அவரது விசாரணையில் பல பொய் சாட்சிகளைகொண்டு இதனை விபத்து வழக்காக முடிப்பதற்கு முயற்சி செய்தார். இதையடுத்து கடந்த 08.07.2013 அன்று மாண்புமிகு தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு (2013/737364/JX) புகார் செய்தேன். இதற்கு 20.08.2013 அன்று புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர், முதல்வரின் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ள பதிலில், உடனடியாக வேறு விசாரணை அதிகாரிக்கு மாற்றி தருவதாக உறுதியளித்துள்ளார் (நகல் இணைக்கப்பட்டுள்ளது).
    
01) அதன்படி 20.08.2013 – 31.12.2014 இந்தநாள் வரையில், 498 நாட்கள் ஆகியும் மாண்புமிகு தமிழக முதல்வரின் தனிப்பிரிவிற்கு உறுதியளித்தபடி, இவ்வழக்கை புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புதிய விசாரணை அதிகாரிக்கு மாற்றி கொடுக்காததன்  காரணம் என்ன? இவ்வழக்கில் அவர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
02) இதே வழக்கு தொடர்பாக கடந்த 10.10.2014 அன்று கீழ்க்காணும் இணைப்புகளுடன், மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்களிடம் நேரில் புகார் அளித்தேன். இப்புகாரின் மீது மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் புதுக்கோட்டை மவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?
03) இதே வழக்கு தொடர்பாக கடந்த 10.10.2014 அன்று கீழ்க்காணும் இணைப்புகளுடன், மத்திய மண்டல காவல்துறை துணை தலைவர் அவர்களிடம் நேரில் புகார் அளித்தேன். இப்புகாரின் மீது மத்திய மண்டல காவல்துறை துணை தலைவர் மற்றும் புதுக்கோட்டை மவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கை என்ன?

     மேற்குறிப்பிட்ட வினாக்களுக்குறிய பதிலை தகவலாக அளிக்குமாறு தங்களை மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.



இடம்: கந்தர்வக்கோட்டை                     இப்படிக்கு,

நாள்: 31.12.2014                         தங்கள் உண்மையுள்ள,
                                        
                                         (ம.பாலமுருகன்).
இத்துடன்  இணைக்கப்பட்டுள்ளவை:
1.முதல் தகவல் அறிக்கை நகல்
2.உயர்நீதிமன்ற மதுரை கிளை- உத்தரவு நகல்
3.தமிழக முதல்வரின் – தனிப்புகாரின் நகல்
4. மத்திய மண்டல காவல்துறை தலைவர்- புகார் நகல்

5. மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர்- புகார் நகல்

sample rti to RTI

1. மாநில தகவல் ஆணயத்திற்கு விசாரணையின் பொருட்டு வரும் மேல்முறையீட்டாளர்களுக்கு அவர்களின் வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ளதா என்ற விவரம் தரவும்.
2. விசாரணையின் பொழுது மேல்முறையீட்டாளர்கள் மற்றும் பொது தகவல் அலுவலர் அமர்வதற்கு என்னவிதமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது என்ற விவரம் தரவும்.
3. மாநில தகவல் ஆணைய உரிமையியல் நீதிமன்றத்திற்குரிய அதிகார வரம்புடன் செயல்படுவதால் விசாரணையின் போது பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா/ இல்லை என்றால் அதற்குரிய காரணம் சட்டப் பிரிவு 4(d) -ன் படி தரவும்.
4. 2009 மற்றும் அதற்கு பிந்தைய வருடங்களுக்குரிய ஆண்டறிக்கை ஆணையத்தின் இணையதளத்தில் தரவேற்றம் செய்யப்படாதற்கான காரணம் என்ன என்ற தகவல் தரவும்.
5. 2009 மற்றும் அதற்கு பிந்தைய வருடங்களுக்குரிய ஆண்டறிக்கை பெற எங்கு, யாரைத் தொடர்பு கொள்ல வேண்டும் என்ற தகவல் தருக.
6. 2009 மற்றும் அதற்கு பிந்தைய வருடங்களுக்குரிய ஆண்டறிக்கை ஆணையத்தின் இணையதளத்தில் தரவேற்றம் செய்ய கடமைப் பட்டுள்ள அலுவலர் பெயர், பதவி மற்றும் கல்வித் தகுதி ஆகிய விவரம் தரவும்.
7. மேற்படி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ள அலுவலர் பெயர், பதவி மற்றும் கல்வித் தகுதி ஆகிய விவரம் தரவும்.

Sample application for FILMS

பெறுநர்: பொதுத் தகவல் அலுவலர், தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005,          வணிகவரி மற்றும் பதிவுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-9


தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் படிகீழே கோரப்பட்ட விவரங்களைவழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்விண்ணப்ப கட்டணமாக ரூ.10நீதிமன்ற வில்லை ஒட்டியுள்ளேன்.

  1. 1.   அங்குசம்” என்ற திரைப்படத்திற்கு வரிவிலக்கு கோரி:
1.  அ) தங்கள் அலுவலத்திற்கு விண்ணப்பிக்கப்பட்ட நாள் என்ன ? 1  ஆ) விண்ணப்பிக்கப்பட்ட நாள் முதல், இதுநாள் வரை(to-date) வரை அந்த விண்ணப்பத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாள் வாரியாகத் தரவும் 1   இ) விண்ணப்பித்த நாள் முதல் இதுநாள் வரை(to-date) மனு குறித்து தங்கள் துறை அதிகாரிகள் எழுதிய அலுவலக குறிப்புகளின் (File noting) நகல் தேவை

  1. திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதற்கு : 2  அ) 2006-2011 வரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகள்(Procedures) குறித்த விவரங்கள் தரவும் 2  ஆ) தற்போது(as of 21-10-2013) பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகள்(Procedures) குறித்த விவரங்கள் தரவும்

  1. 3.   1-4-2006 முதல் 21-10-2013 வரையான காலகட்டத்தில்:
3 அ) ஆண்டுவாரியாக திரைப்படங்களுக்கு வரிவிலக்கு கொடுக்கப்பட்ட தொகை விவரங்கள் தரவும் ? 
3 ஆ) திரைப்படம் வாரியாக வரிவிலக்கு கொடுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்ற விவரங்கள் தரவும் ?

  1. மேலே கேட்கப்பட்ட விவரங்களை நேரில் பார்வையிட தகுந்த நாள், நேரம் ஒதுக்கித் தரவும்

                                                                                  இப்படிக்கு,                                                                                         





அங்குசம் - நீங்களும் அனுப்பலாம் RTI

செவ்வாய், 6 ஜனவரி, 2015

RTI power

பேஸ்புக் பக்கத்தில் படித்தது . உங்களது பார்வைக்கு 



நான் இதுவரை மூன்று ஆர்டிஐகளை மட்டுமே செய்துள்ளேன்.
முதலாவதுக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் உரிய தகவல் அளித்ததோடு, தொலைபேசியில் தொடர்பு கொண்டும் என்னிடம் பேசினார். நான் எதிர்பார்த்த வேலை உடனடியாக முடித்துக் கொடுக்கப்பட்டது.
இரண்டாவதாக செய்யப்பட்ட மனுவிற்கு வட்டாட்சியர் அலுவலகம் பதிலளிக்கவில்லை. ஆணையம் தகவல் கொடுக்கும்படி சொன்ன பிறகு, வட்டாட்சியரானவர் விஏஓவை எனது வீட்டுக்கு அனுப்பி, அவரது தொலைபேசி மூலமாக என்னை தொடர்பு கொண்டு, என்னை மூளைச்சலவை செய்ய முயன்றார். நான் உடன்படவில்லை. பிறகு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் தக்கதாக இல்லை. எனவே ஆணையத்திடம் வழக்கு செய்தேன். வழக்கு எண் 27004 ஆகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் எனக்கு விசாரணைக் கடிதம் வரவில்லை. தொடர்ந்து முயன்று கொண்டுள்ளேன். பிறகு பதிலளிக்கப்பட்ட விவரத்தை வாலாகப் பிடித்துக்கொண்டு புதிதாக மூன்றாவதாக ஒரு ஆர்டிஐ போட்டுள்ளேன். அதுவும் நீண்டு கொண்டுள்ளது.
நான்காவதாக பஞ்சாப் நேஷ்னல் பேங்க் மேனேஜரிடம் நேரடியாக ஆர்டிஐ பெட்டிஷனை நீட்டிய போது, அவர் வாங்க மறுத்து எனது கோரிக்கையை மட்டும் நிவர்த்தி செய்தார். ஆனால் பயத்தினால் மறைமுகமாக உள்ளூர் குண்டர்களை வைத்து என்னை கை கால்களை வெட்டி விடுவதாக மிரட்டினார். பிறகு அவசரமாக ட்ரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார். அப்போது அங்கிருந்த துணை மேனேஜரானவர் மேனேஜர் ஆனார். ஆனால் நான் ஆர்டிஐயில் கேட்ட கேள்விகளுக்கான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததாலும், நான் மற்றும் தவறு செய்யச் சொல்லும் சமூக விரோதிகளுக்கு இடையில் இருந்துகொண்டு ஈடு கொடுக்க முடியாததாலும் அவரும் ட்ராஸ்பராகிச் சென்றுவிட்டார்.
இதுவெல்லாம் எதனால்? எனது ஆர்டிஐக்கள் பவர்ஃபுல்லாக இருந்ததனாலா இல்லை இல்லாததனாலா?

Sample RTI Teachers recruitment





போக்குவரத்துக் கழக RTI sample applications

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருச்சி கோட்டத்திற்கான ஆர்டிஐ.
1. ஜெயங்கொண்டம் பணிமனையில் இருந்து, ஜெயங்கொண்டம் முதல் ஆதனக்குறிச்சி வரை தடம் எண் 11 ஆக இயக்கப்படும் நகரப் பேருந்தானது, தேவனூர் வழியாக இயக்கப்படுவது ஏன் நிறுத்தப்பட்டது என்பதைத் தெரிவிக்கவும்.
2. அப்பேருந்து எந்த தேதி முதல், எந்த தேதி வரை தேவனூர் வழியாக இயக்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கவும்.
3. அப்பேருந்து தேவனூர் வழியாக இயக்கப்படுதல் என்பது, எக்காரணங்களுக்காக துவங்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கவும்.
4. ஜெயங்கொண்டம் பணிமனையில் இருந்து, ஜெயங்கொண்டம் முதல் ஆண்டிமடம் வரை தடம் எண் 8 ஆக இயக்கப்படும் நகரப் பேருந்தின் புறப்படுதல் மற்றும் சென்றடைதல் கால தினசரி அட்டவணையை, நாள் முழுவதின் அனைத்து ட்ரிப்புகளுக்காகவும் இரு மார்க்கங்களிலும் தரவும்.
5. அப்பேருந்து தேவனூரில் நின்று செல்லும் தினசரி பயண நேரத்தை, நாள் முழுவதின் அனைத்து ட்ரிப்புகளுக்காகவும் இரு மார்க்கங்களிலும் தரவும்.
6. அப்பேருந்து ஏன் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நேரமாகவும், மக்கள் அறிந்துள்ள நேரத்தில் இருந்து 20 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்கள் வரை முன்னதாகவும் செல்கின்றது என்பதைத் தெரிவிக்கவும்.
7. அப்பேருந்து இயக்கப்படுவது காலத்தோடு மக்களுக்கு சேவை புரியவா அல்லது தான்தோன்றித் தனமாக ஓட்டுநரும், நடத்துனரும் மட்டும் சம்பளத்து கடமைக்காக கண்டபடி இயக்கிக் கொள்ளவா என்பதைத் தெரிவிக்கவும்.

அரசு தகவல்கள் ONLINE பெற





https://rtionline.gov.in/login.php.... இந்த வெப்சைட்டில் சென்று sign up கொடுத்து நமக்கு என்று ஒரு account உருவாக்கி கொண்டு rti மூலம் தகவல்கள் பெறலாம்....மத்திய அரசு தகவல்கள்  ஆங்கிலத்தில்மட்டுமே.

மத்திய அரசு அலுவலகங்களுக்கு மட்டுமான ஆர்டிஐக்களை தற்போது ஆன்லைனில் செய்யலாம். ரிஜிஸ்டர் போஸ்ட் செலவு மிச்சம். விண்ணப்பம், முதல் மேல்முறையீடு ஆகியவற்றை செய்யலாம். நீங்கள் துறை மாற்றி அனுப்பி இருந்தாலும் அது சரியான துறைக்கு அனுப்பப்பட்டு உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். பணம் ஆன்லைனில் செலுத்திக் கொள்ளலாம். மேலும் பணம் செலுத்த வேண்டி இருத்தல், நிராகரிப்பு உள்ளிட்ட அனைத்து ஸ்டேட்டசுகளையும் லிங்க் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த எளிய முறையை அனைவரும் பயன்படுத்தலாம்.